Ads (728x90)

யாழ்ப்­பாண மாவட்­டத்­தின் அபி­வி­ருத்தித் திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தில் சில திணைக்­கள அதி­கா­ரி­கள் தடை­யாக உள்­ள­னர்.அவ்­வா­றான அதி­கா­ரி­கள் மீது பார­பட்­சம் பாராது நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும். இவ்­வாறு யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லர் நா.வேத­நா­ய­கன் தெரி­வித்­தார். யாழ். மாவட்ட அபி­வி­ருத்­திக் குழுக் கூட்­டம் நேற்று நடை­பெற்­றது. அதில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

அவர் தெரி­வித்­த­தா­வது:- யாழ்ப்­பாண மாவட்­டத்­தின் அபி­வி­ருத்தித் திட்­டங்­களை நாம் முழு வீச்­சில் நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கின்­றோம். எமது மாவட்­டத்­தின் திட்­டங்­கள் கால­தா­ம­த­மா­வ­தற்கு இங்­குள்ள சில திணைக்­க­ளங்­க­ளின் அதி­கா­ரி­க­ளும் முக்­கிய கார­ண­மாக இருக்­கின்­ற­னர். சில திணைக்­க­ளங்­க­ளின் அதி­கா­ரி­கள் அபி­வி­ருத்தி திட்­டங்­க­ளின் போது அவர்­க­ளு­டைய வேலைத்­திட்­டங்­க­ளின் வவுச்­சர்­களை வேண்­டு­மென்றே கால­தா­ம­த­மாக்­கு­கின்­ற­னர். இங்­குள்ள சில தொழில்­நுட்ப உத்­தி­யோ­கத்­தர்­கள் எமது அபி­வி­ருத்­தித் திட்­டங்­க­ளுக்­கு முழு ஒத்­து­ழைப்பை வழங்­கு­வ­தில்லை.

அவர்­க­ளில் பலர் இனங் காணப்­பட்­டுள்­ள­னர். இவ்­வாறு விஷ­மத்­த­ன­மான செயற்­பா­டு­க­ளில் ஈடு­ப­டும் உத்­தி­யோ­கத்­தர்­கள் மற்­றும் அதி­கா­ரி­கள் மீது பார­பட்­சம் இன்றி நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும். எமக்கு எமது மாவட்­டத்­தின் அபி­வி­ருத்­தியே முக்­கி­ய­மா­கும். எமது திட்­டங்­களைக் கைய­கப்­ப­டுத்தச் சிறந்த ஒப்­பந்­த­கா­ரர்­கள் இல்­லா­மை­யா­லும் அவை கால­த­ாம­த­மா­கின்­றன. எது எப்­படி இருப்­பி­னும் நாம் எமது மாவட்­டத்­துக்­கான நடப்­பாண்டுத் திட்­டங்­களை குறிப்­பிட்ட காலப்­ப­கு­திக்­குள் நிறை­வேற்ற முழு முயற்­சி­களை எடுத்து செயற்­பட்டு வரு­கின்­றோம் – என்­றார்.

வடக்கு மாகா­ணத்­தில் மாகாண சபை­யால் மேற்­கொள்­ளப்­பட்ட பல அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­க­ளுக்­கான 525 மில்­லி­யன் ரூபா நிதி இன்­று­வரை திறை­சே­ரி­யில் இருந்து கிடைக்­கப்­பெ­ற­வில்லை என வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் இதன்­போது சுட்­டிக்­காட்­டி­னார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget