Ads (728x90)

ஐக்கிய நாடுகளின் பொருளாதார, சமூகப் பேரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றுள்ளார். ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் கலந்­து­கொள் ளும் நோக்கில் ஜனாதிபதி நேற்று திங்கட்கிழமை அமெரிக்காவின் நியூயோர்க் நகரை சென்றடைந்தார்.

இந்நிலையில் அவர் இன்று ஐக்கிய நாடுகளின் பொருளாதார, சமூகப் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் கலந்­து­கொள்ளும்  ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன   இன்று 19 ஆம் திகதி  செவ்­வாய்க்­கி­ழமை   பொதுச் சபையில் உரை­யாற்­ற­வுள்ளார்.

இந்த உரை­யின்­போது  அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­படும் நல்­லி­ணக்க செயற்­பா­டுகள், புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும்  வேலைத்­திட்­டங்கள்  போன்­றவை தொடர்­பாக  உல­க­நா­டு­களின் தலை­வர்­க­ளுக்கு  விளக்­க­ம­ளிக்­க­வுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget