Ads (728x90)

மலேரியாவிற்கு எதிராக பயன்படுத்தப்படும் இந்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகள் கொரோனாவை ஓரளவு கட்டுப்படுத்துகிறது. இந்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்து இந்தியாவிடம் அதிகம் உள்ளது.

அமெரிக்கா இந்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை தங்கள் நாட்டிற்கு அனுப்பும்படி இந்தியாவிற்கு கோரிக்கை வைத்துள்ளது.

"நான் நேற்று பிரதமர் மோடியிடம் பேசினேன், இந்தியாவில் மலேரியாவை கட்டுப்படுத்தும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்து அதிகம் உள்ளது. அவர்கள்தான் உலகில் மிக அதிகமாக ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை உற்பத்தி செய்வது. அதனால் அவர்கள் அமெரிக்காவிற்கு உதவி செய்ய வேண்டும்.

அவர்களிடம் 1.5 பில்லியன் மக்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இந்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை அதிகம் உற்பத்தி செய்ய கூறியுள்ளோம்.

ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய சொல்லி இருக்கிறேன். இந்தியா எங்களுக்கு ஏற்றுமதி செய்யும் என்று நம்புகிறேன்" என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது. ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் இந்திய மருத்துவ கழகம் சார்பாக கொரோனாவிற்கு எதிராக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் ஓரளவு உதவுவதால் இந்தியா இதன் ஏற்றுமதியை தடை செய்துள்ளது.

ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தின் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று தனது நிலைப்பாட்டை தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget