அவசரகால நிலை தொடர்பான பிரகடனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைவாக நேற்று நள்ளிரவு முதல் நீக்கப்பட்டுள்ளது.இதற்கமைவாக, நேற்று நள்ளிரவிலிருந்து இதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் காரணமாக கடந்த 6ஆம் திகதி அவசரகாலச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment