Ads (728x90)

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 6 மாவட்டங்களில் 6 ஆயிரத்து 907 குடும்பங்களைச் சேர்ந்த 27,419 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று நிலைமை காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வரும் நிலையில், களு மற்றும் களனி ஆகிய பிரதான கங்கைகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் அவற்றின் தாழ்நிலப் பகுதிகளுக்குச் சிறு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

நிலவும் வரும் கடும் மழை காரணமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களான நுவரவௌ, உஸ்கல சியம்பலாங்கமுவ, மெடியாவ, நாலந்தா மற்றும் வேமெடில்ல ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன், இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகளும், தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகளும் அம்பாந்தோட்டை யோதவௌ நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.  


Post a Comment

Recent News

Recent Posts Widget