Ads (728x90)

தடைப்பட்ட   திருமணம்   நடைபெற

ஒவ்வொரு தமிழ் மாதம் துவங்கும்போதும் உத்திரம் நட்சத்திரம் வரும் வளர்பிறை நாளில் அருகில் உள்ள சிவன் கோயில் சென்று சிவபெருமானுக்கு வில்வ மாலை சார்த்தி அபிசேகம் செய்து வழிபட வேண்டும்.

பிரதோச நாளில் நந்திபகவானுக்கு பால்,தயிர் வாங்கி அபிசேகத்துக்கு கொடுக்க வேண்டும். விரைவில் திருமணம் நடைபெறும்.

ஏற்றமான வாழ்வு அமைய

விநாயகருக்கும், சனிபகவானுக்கும் மிகவும் பிரியமான  மரம்  வன்னி மரம். வன்னிமரத்தின் கீழ்  உள்ள விநாயகரை   வழிபடுவதால் சனி, ராகு, கேது, தசாபுத்தி பாதிப்பு, ஆயுள் விருத்தி, நினைத்த காரியம் நிறைவேறல், பொன்பொருள்  சேர்க்கை  ஏற்றமான வாழ்வு அமையும்.

புத்திர பாக்கியத்திற்கு

ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் சிவன் கோவிலில் உள்ள பைரவருக்கு சிவப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து    வந்தால் குழந்தை பாக்கியம் கைகூடும்.

கடும் குடும்ப பிரச்சினைகள் அகல

தினமும் வீட்டில் உள்ளூர்  பெருமாள்  கோவிலில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு சனிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி  வழிபட பாதிப்பு நீங்கும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget