Ads (728x90)

எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் 31 ஆம் திக­திக்கு முன்னர் உள்­ளூ­ராட்சி தேர்­தலை நடத்த வேண்­டு­மானால் அது தொடர்­பான விசேட திருத்த சட்­ட­மூலம் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் வாரத்­திற்குள் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட வேண்டும். இதற்­கான நட­வ­டிக்­கை­யினை மேற்­கொண்டால் தேர்­தலை நடத்த முடியும் என்று தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­துள்ளார்.
உள்­ளூ­ராட்சி சபைகள் திருத்த சட்­ட­மூலம் தொடர்­பிலும் இதில் பெண்­க­ளுக்­கான ஒதுக்­கீடு குறித்தும் ஆராய்­வ­தற்­காக பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் கட் சித் தலை­வர்கள் மற்றும் பெண் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை உள்­ள­டக்­கிய கூட்டம் நேற்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய இவ்­வாறு கூறி­யுள்ளார்.

இந்தக் கூட்­டத்தில் அமைச்­சர்­க­ளான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், பைஸர் முஸ்­தபா, தலதா அத்­துக்­கோ­ரள, இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளான திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன், சுதர்­சினி பெர்­னாண்­டோ­புள்ளே, பிரதி அமைச்­சர்­க­ளான அனோமா கமகே, அஜித் பி பெரேரா எம்.பி.க்களான எம்.ஏ.சுமந்­திரன், அனு­ர­கு­மார திஸா­நா­யக்க, பிமல் ரத்­நா­யக்க, டக்ளஸ் தேவா­னந்தா உட்­பட பலரும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.
இந்தக் கூட்­டத்தில் உள்­ளூ­ராட்சி சபைகள் திருத்த சட்­ட­மூ­லத்தில் இடம்­பெற வேண்­டி­யுள்ள விட­யங்கள் தொடர்பில் ஆரா­யப்­பட்­டன. இதன்­போது கருத்துத் தெரி­வித்த தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய,  
மேற்­படி  விடயம்  தொடர்­பாக ஏற்கனவே பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள சட்ட வரை­வுக்கு புதிய திருத்­தங்­களை  உட்­ சேர்த்துக் கொள்­வ­தற்­கான  கலந்­து­ரை­யா­டல்­களில்  தேர்தல் ஆணைக்­கு­ழுவின்  அலு­வ­லர்கள் கலந்­து­கொள்­வது, தேர்­தலை பிரச்­சி­னை­யின்றி நடத்­து­வ­தற்கு  ஏற்­ப­டக்­கூ­டிய  வச­தி­யீ­னங்­களைத் தவிர்த்­துக்­கொள்ளும் பொருட்டு, தேவை­யான  விட­யங்­களை  சுட்­டிக்­காட்­டு­வ­தற்­காக என்­பதை கருத்­திற்­கொள்­வது பொருத்­த­மாகும்.  
ஏனெனில், தேர்தல் முறை அல்­லது  வட்­டா­ரங்கள் மற்றும் விகி­தா­சார பிர­தி­நி­தித்துவ முறை­யூ­டாக தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­கின்ற  பிர­தி­ நி­தி­களே விகி­தா­சா­ரத்தில் மாற்றம்  மேற் கொள்ளல் போன்ற கொள்கை ரீதியான  விடயங்கள்  தொடர்­பாக உத்தியோகபூர்வ கருத்­தொன்றை  இச்­சந்­தர்ப்­பத்தில்  ஆணைக்­ கு­ழு­வினால் தெரி­விப்­பது பொருத்­த­மற்­ற­தென்ற கார­ணத்­தி­னா­லாகும். 
எவ்­வா­றி­ருப்­பினும் வட்­டா­ரங்கள், விகி­தா­சார பிர­தி­நி­தித்­துவம்  ஆகிய விகி­தா­சாரம் 70:30 ஐ விட மாற்­றப்­பட வேண்­டு­மென  மற்றும் விகி­தா­சார  முறையின் கீழ் பிர­தி­நி­தி­யொ­ருவர் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­வ­தற்­கான 5%  ஆகக் குறைந்த  எல்­லையைக் குறைத்தல், உறுப்­பினர் எண்­ணிக்கை  அதிகளவில்  அதி­க­ரித்துக் காணப்­படல்  போன்ற விட­யங்கள் தொடர்­பாக அர­சியல் கட்சி  முக­வர்­க­ளினால்  தேர்தல்  ஆணைக்­கு­ழு­விற்கு  விட­யங்கள்  சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தென்­பதை  உங்­க­ளுக்கு அறிக்­கை­யிட விரும்­பு­கின்றேன்.                                                 
அத்­த­கைய கொள்கை  ரீதி­யான  விட­யங்­களை   திருத்தம் செய்தல் அல்­லது திருத்தம் செய்­யா­தி­ருத்தல்  தேர்­தலை  நடத்­து­வ­தற்கு  தடை­யொன்­றல்ல என்­ப­தோடு,  எவ்­வா­றா­ யினும்,  புதிய  திருத்­தங்­களை  மேற்­கொள் ­வ­த­னூ­டாக  ஏற்­க­னவே  தாம­த­ம­டைந்துள்ள உள்­ளூ­ர­தி­கார  சபைத் தேர்­தலை  நடத்­து­வது  மேலும் தாம­த­ம­டை­வதை  தவிர்த்துக் கொள்­வ­தற்கு  கட்­டா­ய­மா­கு­மென்­பது ஆணைக்­ கு­ழுவின்  கருத்­தென்­பதை மேலும் தெரி­வித்துக் கொள்கின்றோம். 
வட்­டா­ரங்கள் மற்றும் விகி­தா­சார பிர­தி­நி­தித்­துவ முறை என்­ப­வற்­றி­னூ­டாக  தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­கின்ற எண்­ணிக்­கை­களில்  மாற்­ றங்­களை  மேற்­கொள்­வ­தற்கு எதிர்­பார்ப்­ப­தாயின், கீழே காட்­டப்­பட்­டுள்ள  விட­யங்கள் தொடர்­பாக விசேட  கவ­னத்தை  செலுத்­து­மாறு         கேட்­டுக்­கொள்­கின்றோம். 
அ. ஏற்­க­னவே  தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்ள தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­கின்ற  உறுப்­பினர்  எண்­ணிக்­கையில்  அதி­க­ரிப்­பொன்றை  மேற்­கொள்­ளாமை. 
ஆ. மீண்டும் எல்லை நிர்­ணயம்   மேற்­கொள்­ளாமை.
இ. 25% பெண்கள்  பிர­தி­நி­தித்­து­வத்தை  உறுதி செய்­வதன் தேவைப்­பாடு. 
ஈ. இளைஞர் பிர­தி­நி­தித்­து­வத்­திற்கு  சந்­தர்ப்­ப­மொன்றை ஏற்­ப­டுத்திக் கொடுத்தல். 
முக்­கி­ய­மான விடயம் யாதெனில்  உட­ன­டி­யாக  இவ்­ உள்ளூர்  அதி­கார சபைத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு  நட­வ­டிக்­கை­யெ­டுப்­ப­தாகும். 2017 ஆம் ஆண்டு  ஒக்­டோபர்  மாதம் 31 ஆம் திக­திக்கு  முன்னர் இத்­தேர்­தலை  நடத்த முடி­வது  புதிய  விசேட  திருத்­தங்­க­ளுடன்  அல்­லது திருத்­தங்­க­ளின்றி 2012  ஆம் ஆண்டின் 22 ஆம்  இலக்க உள்­ளூ­ர­தி­கார சபைத் தேர்தல் (திருத்தச்)  சட்­டத்தின்  தொழி­ல்நுட்ப ரீதி­யான  வழுக்­களை நீக்கும் வரைவை 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம்  வாரத்­தினுள்  (அல்­லது 3 ஆம்  வார  ஆரம்­பத்தில்)  பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றினால் மாத்­தி­ர­மென்­பதை  சுட்­டிக்­காட்­டு­கின்றோம். 2012 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க சட்­டத்தில் குறிப்­பிட்­டுள்ள உத்­தேச வட்­டார முறை, தோல்­வி­ய­டைந்த  வேட்­பாளர்  வாக்­கு­க­ளுக்­கான  விகி­தா­சார  பிர­தி­நி­தித்­துவ முறை மற்றும் முழு­மை­யான  விகி­தா­சார  பெண்கள் பிர­தி­நி­தித்­துவ முறை  ஆகிய மூன்று முறை­க­ளையும்  ஒரே முறையில்  பயன்­ப­டுத்­து­கின்ற தேர்தல்  முறை­யொன்று தொடர்பான எவ்வித அனுபவமும் இல்லையென்பதால், சட்டம் நிறைவேற்றப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்ப டுவதற்கு 75 நாட்கள் காலமொன்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு  தேவைப்படுவதே இத ற்கான காரணமாகும். 
பாராளுமன்ற அல்லது சட்டவாக்க சபை விதிக்கின்ற விதத்தில் அல்லது சட்டம் வகுக்கின்ற விதத்தில் நீதியான மற்றும் சுதந் திரமான தேர்தல்களை நடத்துவது  தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பென்பதால்,  அப்பொறுப்புகளை  நிறைவேற்றுவதற்கு  பாராளுமன்றத்தினால்  விதிக்கப்படுகின்ற  விதத்தில் தேர்தல்களை  நடத்துவதற்கு  தேர் தல் ஆணைக்குழு எப்போதும்  தயாராக வுள்ளதென்பதை மீண்டும்  தயவன்புடன் அறியத்தருகின்றோம் என்று தெரிவித்துள் ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget