
ஹேமில்டன்: உலகின் மிகவும் மர்மமான பகுதியாக கருதப்படும், பெர்முடா முக்கோணத்தில் திடீரென புதிய தீவு ஒன்று தோன்றியுள்ளது. வட அமெரிக்காவை ஒட்டிய அட்லாண்டிக் பெருங்கடலில், 4 லட்சத்து 40 ஆயிரம் மைல்கள் பரப்பளவு கொண்ட கடல்பகுதி பெர்முடா முக்கோணம் என்று அழைக்கப்படுகிறது. இதன் அருகே செல்லும் விமானங்கள் மற்றும் கப்பல்கள் மர்மமான முறையில் மாயமாகி வருவது விடைதெரியா மர்மமாகவே உள்ளது. ஆகையால் இது உலகின் ஆபத்தான பகுதி என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த பகுதியில் திடீரென ஒரு மைல் நீளம் கொண்ட சிறிய தீவு ஒன்று உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது. ஷெல்லி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தீவுக்கு தற்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்ல துவங்கியுள்ளனர். இன்று வரை சரியான தீர்வுகள் கண்டறியப்படாத பெர்முடா முக்கோணத்தில் உருவாகியுள்ள இந்த தீவு ஆபத்துக்கள் நிறைந்தவையாக இருக்கலாம் என்றும், அங்கு செல்வதை மக்கள் தவிர்த்து கொள்ளுமாறும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
Post a Comment