யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் இன்று பிற்பகல் அவசர கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
நேற்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் வாகனத்தில் பயணித்தபோது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது. அதில் அவரது மெய்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக கலந்துரையாடி எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஆராயவே யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் அவசர கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

Post a Comment