Ads (728x90)

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1-ஹெச் செயற்கைகோளுடன்  விண்ணில் ஏவப்பட உள்ள PSLV C-39 ராக்கெட்டுக்கான 29 மணி நேர கவுன்டவுன் நாளை துவங்குகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து PSLV C-39 வரும் 31-ம் தேதி மாலை விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 29 மணி நேர கவுன்டவுன் நாளை பகல் 1.59 மணிக்கு துவங்குகிறது. 29 மணி நேர கவுண்டவுன் 31-ம் தேதி மாலை  6.59 மணிக்கு முடிவடைந்தவுடன் ராக்கெட் விண்ணில் பாய உள்ளது.

தற்போது ராக்கெட்டின் பாகங்கள் பொருத்தப்பட்டு, எரிபொருள் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ராக்கெட் 320 டன் எடையும், 44.4 மீட்டர் உயரமும் கொண்டது. இதில் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட IRNSS 1-H செயற்கைகோள் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது. இந்த செயற்கைகோள் மூலமாக இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை, கடல் சார் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும்.

கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையில் திட்டமிட்டப்படி 7 செயற்கைகோள்களை வெற்றிகரமாக இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இதில் முதலில் செலுத்தப்பட்ட செயற்கைகோளின் ஆயுள் காலம் நிறைவடைய உள்ளது. இதனையடுத்து புதிதாக 1,425 கிலோ எடை கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது. இந்த செயற்கை கோள் பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சம் 20 ஆயிரத்து 657 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை நிறுத்தப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget