Ads (728x90)

வடக்கு மாகா­ணத்­தில் புதி­தாக எட்­டுப் பாலங்­கள் அமைக்­கப்­ப­டு­கின்­ற­போ­தும் மாகாண சாலை அபி­வி­ருத்தி அதி­கார சபை­யி­ன­ரின் எவ்­வித பங்­கு­பற்­ற­லும் இல்­லாது அதி­கார சபை­யின் கொழும்பு அதி­கா­ரி­களே வடக்­குக்கு வந்து அவற்­றின் பணி­களை முன்­னெ­டுக்­கின்­ற­னர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
வடக்கு மாகா­ணத்­தில் அமைக்­கப்­பட்டு வரும் பாலங்­கள் தொடர்­பில் சாலை யின் பொறுப்­பா­ளி­கள் என்ற வகை­யில் நாம் இணைந் துள்­ளோமே தவிர கட்­டு­மா­னம் சார்ந்த எந்­த­வொரு விட­ யங்­க­ளுக்­கும் எமக்கும் தொடர்­பில்லை என்று மாகாண சாலை அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை தெரி­வித்­துள்­ளது.
இது­பற்றி மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது:‘ஜெய்க்கா’ சிறப்பு செயற் திட்­டத்­தின்­கீழ் நாடு முழு­வ­ தும்.37 பாலங்­களை அமைப்­ப­தற்கு  3.78 பில்­லி­யன் ரூபா நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. வடக்­கி­லும் 8 பாலங்­கள் அமைப்­ப­தற்கு மூவா­யி­ரத்து 800 மில்­லி­ யன் ரூபா கிடைத்­துள்­ளது. இதற்­க­மை­வாக   யாழ்ப்­பா­ணம், வவு­னியா, கிளி­நொச்சி, மன்­னார் மாவட்­டங்­க­ளில்  பாலங்­கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன.
இதற்­கான பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. இது 20 மாதங்­களை கொண்ட செயற்­திட்­ட­மாக அமை­கின்­றது. இந்­தப் பாலங்­கள் அமைப்பு தொடர்­பில் சில குறை­பா­டு­கள் உள்­ள­தாக அண்­மை­யில் நடை­பெற்ற மன்­னார் மாவட்ட ஒருங்­கி­ணைப்பு குழுக் கூட்­டத்­தில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.
மன்­னா­ரில் அமைக்­கப்­பட்டு வரும் பாலத்­தின் வேலை­க­ளுக்­காக மண­லுக்­குப் பதி­லாக ‘குவாரி டஸ்ட்’ பயன்­ப­டுத்­து­வது தொடர்­பாக சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது.  ஏனைய மாவட்­டங்­க­ளில் மணல் பயன்­ப­டுத்­து­கின்­றது.வடக்கு மாகா­ணத்­தில் பாலம் அமைக்­க­வேண்­டிய இடங்­களைத் தெரி­வு­ செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
வடக்கு திணைக்களத்துக்குச்  சொந்­த­மான சாலை­க­ளில் பாலங்­கள் அமைக்­கப்­ப­டு­வ­தால் நாம் அவற்­றின் செயற்­பாட்­டில் ஒரு பகு­தி­யாக மாத்­தி­ரமே வடக்கு அலுவலர்கள் தேவை யேற்ப டின் இணைவர்.
பாலம் அமைப்­ப­தற்கு சாலை­க­ளில் தடை­யாகக் காணப்­ப­டும் விட­யங்­க ளைச் சீர்­செய்து கொடுக்­கும் பணி­களை மாத்­தி­ரம்  வடக்கு பணியாளர்கள் செய்கின்றனர்.
ஏனைய விட­யங்­கள் யாவற் றையும் ஜெய்கா சிறப்பு செய­ற் றிட்­டத்­தின் கீழ் உள்ள அதி­கா­ரி­களே முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர். பாலத்­தின் அமைப்பு, தொழி­நுட்ப உத­வி­யா­ளர்­கள், பொறி­யி­ய­லாளர்கள், உத­வி­யா­ளர்­கள் மற்­றும் ஆராய்ச்சி­யா­ளர்­கள் என அனைத்து வளங்­க­ளையும் அவர்­களே தங்­கள் சார்­பில் நிய­மித்து வேலை­கள் நடை­பெற்று வரு­கின்­றன. எங்­கள் உத்­தி­யோ­கத்­தர்­கள் எவ­ரும் இந்த பாலம் அமைப்பு செயற்­திட்­டத்­தில் இல்லை – என்று மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget