Ads (728x90)

காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்­வ­தற்கான அலு­வ­ல­கத்தை செயற்­ப­டுத்­து­வ­தற்­கான வர்த்த­மானி அறி­வித்தலில் ஜனா­தி­ப­தி­யினால் நேற்று கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து உட­ன­டி­யாக விசேட அலு­வ­ல­கத்தை அமைக்கும் நட­வ­டிக்கை இடம்­பெ­ற­வுள்­ளது. 
இது­கு­றித்து தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்க அமைச்சின் செயலாளர் வே.சிவ­ஞா­ன­சோதி விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட் டுள்­ள­தா­வது,
2016ஆம் ஆண்டு 14ஆம் இலக்­க­கா­ணாமல் போன­ ஆட் கள் பற்­றி­ய­ அ­லு­வ­லகம் ஸ்தாபித்­தலும்,நிர்­வ­கித்­தலும் தொடர்­பா­ன­ சட்­டமும் அது­ தொ­டர்­பான 2017 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்­கத்­தி­ருத்­தச்­சட்­டமும் உள்­ள­டங்­க­லா­ன­ கா­ணாமல் போன­ ஆட்கள் பற்­றி­ய­ அ­லு­வ­லகம் தேசி­ய­ஒ­ரு­மைப்­பா­டு ­மற்றும் நல்­லி­ணக்­க­ அ­மைச்சர் என்­ற ­வ­கையில் ஜனா­தி­பதி­ மைத்­தி­ரி­பா­ல ­சி­றி­சே­ன­வினால் நேற்று 12ஆம் திகதி,செப்­டெம்பர் மாதம் 15ஆம் திக­தி­ ந­டை­மு­றைக்­கு­ வ­ரும்­வ­கையில் இலங்கை ஜன­நா­ய­க­ சோ­ச­லி­ச­ கு­டி­ய­ரசின் வர்த்­த­மா­னியில் இடம் பெ­று­வ­தற்­கா­க­ கைச்­சாத்­தி­டப்­பட்­டது.
இத­ன­டிப்­ப­டையில் காணாமல் போனோ­ருக்­கா­ன­ அ­லு­வ­லகம் ஸ்தாபிக்­கப்­பட்டு ­அ­த­னு­டைய­ க­ட­மைகள், அதிகாரங்கள், தொழிற்பாடுகள் நடைமுறைப்படுத்து வதற்கும் தொழிற்படுவதற்குமான   ஏற்பாடுகள் உடனடியாக நடை முறைக்குவரும்.
இது நல்லாட்சி அரசின் கீழ் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற் கான ஒரு மைல்கல்லாக நோக்கப்ப டுகின்றது

Post a Comment

Recent News

Recent Posts Widget