Ads (728x90)

மாகாண சபை தேர்­தலை ஒரே­மு­றையில் நடத்­து­வ­தற்­கான 20 ஆவது திருத்தம் தொடர்­பான விட­யத்தில் உயர் நீதி­மன்றின் தீர்ப்பை கவ­னத்தில் கொண்டு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­து­வதா அல்­லது மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் அதனை நிறை­வேற்­று­வதா என்­பதை பாரா­ளு­மன்­றமே தீர்­மா­னிக்க வேண்டும். சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு செல்­லா­விட்டால் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி மாகாண சபை தேர்­தலை கட்­டா­ய­மாக  நடத்த வேண்டும் என்று சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்தார்.

கொழும்பில் இடம்­பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே  சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் இதனை தெரி­வித்தார்.

இது­கு­றித்து அவர் தொடர்ந்தும் கூறு­கையில்,

அண்­மையில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு இடம்­பெ­றுமா ? இல்­லையா ? என்­பது எமக்கு தெரி­யாது. இந்த விடயம் தொடர்பில் உயர் நீதி­மன்றில் விவா­தமும் இடம்­பெற்­றது. இதன் தீர்ப்பு சபா­நா­ய­க­ருக்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­தாக தெரிய வரு­கின்­றது. சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு தேவை­யில்லை மூன்றில் இரண்டு போது­மா­னது என பாரா­ளு­மன்­றத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்டால், மாகாண சபை தேர்தல் இந்த வருடம் இடம்­பெ­றாது.

ஆனால் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு அவ­சியம் என பாரா­ளு­மன்­றத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்டால் நிச்­ச­ய­மாக தேர்தல் ஒன்­றுக்கு செல்ல வேண்டும். ஒக்­டோபர் 2 ஆம் திகதி வேட்­பு­மனு கோரப்­பட்டு எவ்­வி­த­மான மாற்­றமும் இன்றி தேர்­தலை நடத்த வேண்டும்.  டிசெம்பர் 9 ஆம் திகதி தேர்­தலை நடத்­தியே ஆக வேண்டும். ஏனென்றால் இந்த சட்­ட­மூ­லத்தில் சனிக்­கி­ழமை தேர்தல் நடத்த வேண்டும் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இத­ன­டிப்­ப­டையில் டிசெம்பர் மாதம்  02, 09 மற்றும் 16 ஆகிய திக­திகள் காணப்­ப­டு­கின்­றன. 1 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை மிலாது நபியின் பிறந்த தின நிகழ்வை முஸ்­லிம்கள் கொண்­டா­டு­கின்­றனர். 3ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை போயா தின­மாகக் காணப்­ப­டு­கின்­றது. 16 ஆம் திகதி கல்வி பொது­த­ரா­தர சாதா­ரண பரீட்­சையின் ஆரம்­பித்து விடும். அன்றும் பரீட்­சைகள் இடம்­பெறும். 9 ஆம் திக­தி­யி­லி­ருந்து பரீட்­சைகள் ஆணை­யாளர் நாட்டில் உள்ள பாட­சா­லை­களை பரீட்சை நட­வ­டிக்­கை­க­ளுக்­காக கேட்­டுள்ளார்.

எனவே தேர்­த­லுக்­காக நாட்டில் உள்ள அனைத்து பாட­சா­லை­க­ளையும் எம்மால் பெற்­றுக்­கொள்ள முடி­யா­தது போன்று, மாகாண சபை தேர்­த­லையும் ஒத்­தி­வைக்க முடி­யாது. உயர் நீதி­மன்­றத்தின் தீர்ப்­புக்கு இணங்க சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும் என்றால் 20 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது முடியாத காரியம். எனவே டிசெம்பர் மாதம் 9 ஆம் திகதி கட்டாயமாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதுவே சட்ட நிலைமைகள் என தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget