Ads (728x90)

இரா­ணு­வத்­தி­னர் எந்­தக் குற்­றங்­க­ளை­யும் – காணா­மல் ஆக்­கப்­ப­டு­தல் உள்­ளிட்ட எவற்­றை­யும் செய்­ய­வில்­லை­யா­யின், காணா­மற் போனோர் அலு­வ­ல­கம் அமைப்­பது தொடர்­பில் ஏன் பயப்­பட வேண்­டும். இவ்­வாறு முன்­னாள் இரா­ணு­வத் தள­ப­தி­யும், அமைச்­ச­ரு­மான பீல்ட் மார்­ஷல் சரத் பொன்சேகா கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

கொட்­ட­கேனா பர­மா­னந்த மாவத்­தை­யில் உள்ள விகா­ரை­யில் பெர­ஹ­ரா­வின் ஆரம்ப நிகழ்வு நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்­றது. சரத் பொன்­சேகா இந்த நிகழ்­வில் கலந்து கொண்­டார்.

காணா­மல் போனோர் அலு­வ­ல­கம் இரா­ணு­வத்­திற்கு அச்­சு­றுத்­த­லாக அமை­யும் என்று தெரி­விக்­கப்­ப­டு­வது தொடர்­பா­க­வும், இரா­ணு­வத்தை சரத் பொன்­சேகா காட்­டிக் கொடுப்­ப­தா­கக் குற்­றச்­சாட்­டுக்­கள் முன்­வைக்­கப்­ப­டு­வது தொடர்­பி­லும் கேள்வி எழுப்­பப்­பட்­டது. அதற்­குப் பதி­ல­ளித்த பொன்­சேகா மேலும் தெரி­வித்­த­தா­வது:

காணா­மல்­போ­னோர் விட­யத்­தில் பொறுப்­புக் கூறு­வ­தற்கே காணா­மல்­போ­னோர் அலு­வ­ல­கம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. காணா­மல் ஆக்­கப்­ப­டு­தல் சம்­ப­வங்­க­ளு­டன் இரா­ணு­வத்­தி­ன­ருக்­குத் தொடர்பு இல்லை என்­றால் அவர்­கள் பயப்­பட வேண்­டி­ய­தில்­லையே. போர்க் காலத்­தில் காணா­மல் ஆக்­கப்­ப­டு­தல் சம்­ப­வங்­கள் இடம்­பெ­ற­வில்­லை­யா­யின் இரா­ணு­வம் அச்­ச­ம­டை­யத் தேவை­யில்­லையே.

தலை­ந­க­ரில் மாண­வர்­கள் கடத்­தல் உள்­ளிட்ட சில சம்­ப­வங்­க­ளில் இவற்றை யார் செய்­தார்­கள் என்­பது நீதி­மன்­றில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. குற்­றங்­கள் கண்­ட­றி­யப்­பட வேண்­டும். தண்­டனை வழங்­கப்­ப­ட­வேண்­டும். நான் இரா­ணு­வத்­தைக் காட்­டிக் கொடுக்­க­வில்லை. குற்­றங்­கள் விசா­ரிக்­கப்­பட்­டால், இரா­ணு­வம் அதி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்­டால் இரா­ணு­வத்­திற்­குத்­தான் நற்­பெ­யர் ஏற்­ப­டும் — என்­றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget