Ads (728x90)

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் 3 நாட்களில் நிறைவடைய உள்ளது. இந்நிகழ்ச்சியில் நேற்று 10 லட்சம் கொடுத்து விரும்பியவர்கள் வெளியில் போகலாம் என்று கூறப்பட்டது.

அனைவரும் மறுக்க மீண்டும் ரூ. 1 லட்சம் அதிகம் சேர்த்து ரூ. 11 லட்சம் கொடுத்தும் மறுத்ததால் பணம் திரும்பப்பெறப்பட்டது. ஆனால் இன்று ஒருவர் கண்டிப்பாக எலிமினேட் செய்யப்படுவார்.

இந்நிலையில் நேற்று வைரத்தை திருடும் பழைய டாஸ்க் மீண்டும் வைக்கப்பட்டது. இதில் மற்றவர்கள் இரவில் காவல் காக்கவேண்டும். ஆனால் அனைவரும் உறங்கியதால் ஹரிஷ் வைரத்தை திருடி வைத்துள்ளார். இதை மற்றவர்கள் விரைவில் கண்டு பிடிப்பார்களா பார்க்க வேண்டும்.

ஏற்கனவே கடந்தமுறை ஷக்தி திருடியபோதும் மற்றவர்கள் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் சந்தேகப்பட்டதையடுத்து அழுதுகொண்டு ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget