
அனிருத் 2 பாடல்களைத்தராதது ஒருபக்கம், இரண்டு படங்களுக்கான நீளத்துடன் எடிட்டிங் வெர்ஷன் இருப்பது இன்னொரு பக்கம் என வேலைக்காரன் பட வேலைகள் திட்டமிட்டபடி முடிவடையவில்லை. எனவே இந்தப்படத்தின் ரிலீஸை டிசம்பர் 22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயன், யாருக்கும் பேட்டியளிக்கவில்லை. செய்தியாளர்கள் கேள்வி கேட்கவும் சந்தர்ப்பம் அளிக்கவில்லை.
சிவகார்த்திகேயன் மட்டுமல்ல, சமீபகாலமாக பல நடிகர்கள் பிரஸ்மீட் என்ற பெயரில் கலந்து கொண்டுவிட்டு அவர்கள் என்ன சொல்ல வருகிறார்களோ அதை மட்டும் பேசிவிட்டு செல்கின்றனர். பத்திரிகையாளர்கள் யாருக்கும் பேட்டியோ, கேள்வியோ கேட்க அனுமதிப்பதில்லை. தங்களை நெருங்காத அளவுக்கு தங்களை சுற்றி வட்டம் போட்டுக் கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.
அதேசமயம், விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் செய்தியாளர்களுடன் மிக நட்புடன் பழகி வருகின்றனர்.
Post a Comment