Ads (728x90)



இந்­தத் தீபா­வ­ளிப் பண்­டி­கை­யை­விட அடுத்த ஆண்டு தீபா­வ­ளிப் பண்­டிகை மிக­வும் சிறப்­பான – மகிழ்ச்சி­யான சூழ­லில் நடை­பெ­றும் என்ற நம்­பிக்­கை­யி­லேயே, இன்­றைய தேசிய தீபா­வ­ளிப் பண்­டி­கை­யில் கலந்து கொள்­கின்­றேன்.
இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்க்கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

தேசிய தீபா­வளி பண்­டிகை விழா அல­ரி­மா­ளி­கை­யில் நேற்று இரவு நடை­பெற்­றது. கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னும் கலந்­து­கொண்­டார்.
அவர் அங்கு உரை­யாற்­று­கை­யில் மேலும் தெரி­வித்­த­தா­வது:

நீண்­ட­கா­ல­மாக எமது நாடு இரு­ளில் இருந்­தது. 2015ஆம் ஆண்டு தை மாதம் 8ஆம் திகதி ஆட்சி மாற்­றம் ஏற்­பட்ட பிறகு நாடு இரு­ளில் இருந்து வெளிச்­சத்­திற்கு வந்­துள்­ளது.

தற்­போது புதிய பய­ணத்தை ஆரம்­பித்­துள்­ளது. எல்­லோ­ரும் ஒற்­று­மை­யாக, சமத்­து­வ­மாக வாழும் சூழலை உரு­வாக்­கு­வதே அந்­தப் பய­ண­மா­கும்.
அந்­தப் பய­ணத்தை வழி­ந­டத்­து­வ­தற்­காக சன­நா­யக அடிப்­ப­டை­யில் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும், தலைமை அமைச்­சர் ரணில்­விக்­கி­ர­ம­சிங்­க­வும் இங்கே அமர்ந்­துள்­ள­னர்.

அவர்­கள் வெளிவேறு கட்­சி­களைச் சார்ந்­த­வர்­கள். நீண்ட காலம் ஒற்­று­மைப்­ப­டா­மல் ஒரு­வரை ஒரு­வர் எதிர்த்து அர­சி­யல் செய்து வாழ்ந்­த­வர்­கள். ஆனால் இன்று ஒன்­றாக இணைந்து நாட்­டைப் புதிய பாதைக்கு இட்டு செல்­வ­தற்­காக ஒற்­று­மை­யாக இணைந்து செயற்­ப­டு­கின்­ற­னர்.

அவர்­க­ளுக்கு என்­னு­டைய வாழ்த்­து­களை தெரி­விக்­கின்­றேன். அவர்­கள் இரு­வ­ரும் இந்­தப் பய­ணத்­தில் வெற்­றி­ய­டையவேண்­டும். எமக்­காக மாத்­தி­ர­மல்ல, இந்த நாட்­டிற்­கா­க­வும் அனைத்து மக்­க­ளுக்­கா­க­வும் வெற்­றி­வாகை சூட­வேண்­டும். அந்­தப் பய­ணத்­தில் வெற்றி காணும் முக­மாக புதிய அர­ச­மைப்­பைத் தயா­ரிப்­ப­தற்­கான முயற்­சி­கள் இடம்­பெற்று வரு­கின்­றன. அந்த முயற்­சி­யி­லும் நாம் வெற்­றி­காணவேண்­டும்.

ஒரு­மித்த நாட்­டுக்­குள், பிள­வுப்­ப­டாத, பிரிக்­கப்­பட முடி­யாத நாட்­டுக்­குள் அனைத்து இனத்­த­வர்­க­ளும் சமத்­து­வ­மாக வாழும் வகை­யில் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­படவேண்­டும். அவ்­வா­றான அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தன் மூல­மாக நாங்­கள் எல்­லோ­ரும் ஒரு நாட்டு மக்­க­ளாக வாழ முடி­யும். நாம் இலங்­கை­யர் என்று பெரு­மை­யு­டன் கூறிக் கொள்­வ­தற்கு விரும்­பு­கின்­றோம். எமது மக்­க­ளும் அதனை விரும்­பு­கின்­ற­னர்.

அந்­தப் பய­ணத்தை நோக்­கியே நாம் நகர்ந்த வண்­ணம் உள்­ளோம். அந்­தப் பய­ணத்தை வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுப்­ப­தற்கு அர­சுக்கு நூற்­றுக்கு நூறு வீதம் நாம் ஆத­ரவு வழங்­கு­வோம். அதில் எந்­த­வொரு சந்­தே­க­மும் கொள்ள வேண்­டிய அவ­சி­ய­மில்லை. இது ஒரு புனி­த­மான பய­ண­மா­கும். அந்­தப் பய­ணத்தை வெற்­றிக்­கொள்ள வேண்­டும். அந்த வெற்­றி­யின் ஊடாக இந்த நாடு முன்­னேறவேண்­டும்.

நாட்­டில் வாழும் இந்­துக்­கள், இஸ்­லா­மி­யர்­கள், கிறிஸ்­த­வர்­கள் மற்­றும் பௌத்­தர்­கள் ஒற்­று­மை­யாக வாழ்ந்து சுபீட்­சம் அடைய வேண்­டும். இந்த நாட்­டின் இருள் நீங்கி வெளிச்­சம் ஏற்­படவேண்­டும் என்று பிராத்­திக்­கின்­றேன் – என்­றார்.
இதே­வேளை, 2016ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் 28ஆம் திகதி அல­ரி­மா­ளி­கை­யில் நடை­பெற்ற தேசிய தீபா­வ­ளிப் பண்­டி­கை­யில் உரை­யாற்­றிய இரா.சம்­பந்­தன், நல்­லாட்­சி­யில் தமிழ் மக்­க­ளுக்­கான வெளிச்­சம் தென்­ப­டத் தொடங்­கி­யி­ருக்­கின்­றது. அடுத்த ஆண்டு தீபா­வளி திரு­நா­ளுக்கு முன்­னர் இந்த வெளிச்­சம் நிரந்­த­ர­மாக அமை­யும் என்று குறிப்­பிட்­டி­ருந்­தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget