
மாகாணசபையின் 107ஆவது அமர்வு நேற்று முன்தினம் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது இந்த அமர்வில் கலந்துகொண்டு கருத்துகளை முன்வைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தெரிவித்தததாவது:
வடக்கு மாகாணத்தின் எல்லைக் கிராமங்கள் பல இன்றும் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களின் அடையாளமாகக் காணப்பட்ட கொக்கிளாய் போன்ற எல்லைக்கிராமங்கள் இன்று பறிபோகும் நிலையில் உள்ளன.
இந்த விடயத்தை பலமுறை மாகாண சபையில் சுட்டிக்காட்டிய போதிலும் இன்றுவரை அதனை மீட்க எந்த நடவடிக்கையையும் சபை எடுக்கவில்லை.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு மத்தியில் எமது மாவட்டத்தின் பின் தங்கிய பாடசாலைகளை அபிவிருத்திசெய்து அங்கு கல்விநிலையை உயர்த்துமாறு நாம் கோரிக்கைகளை விடுத்து வருகின்றோம்.
ஆனால் அவ்வாறான இடங்களுக்கு நியமனம் பெற்றுவரும் ஆசிரியர்கள் அரசியல் செல்வாக்குகளை வைத்து உடனடியாக இடமாற்றம் பெற்றுச் சென்று விடுகின்றனர். இதனால் எமது பிள்ளைகள் சிறந்த கல்வி இல்லாது நடுத் தெருவில் நிற்கின்றனர்.
அண்மையில்கூட கொக்கிளாயில் உள்ள பாடசாலைக்கு ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் பாடசாலைக்கு வந்த பேருந்திலேயே திரும்பிச் சென்றுவிட்டார். இப்போது அவர் பூநகரிப் பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கற்பித்து வருகின்றார். இவ்வாறுதான் எமது மாகாணத்தின் ஆசிரியர் நியமனங்கள் காணப்படுகின்றன.
இதனால் பாதிக்கப்படுவது பின் தங்கிய பிரதேசத்தில் வாழும் மாணவர்களே.
இந்தநிலை காணப்படுவதால் பின்தங்கிய பிரதேசத்தில் வாழும் மக்கள் வேறு கிராமங்களுக்கு இடம்பெயரும் நிலை காணப்படுகின்றது.
அத்துடன் தென்னிலங்கைச் சக்திகளும் அந்த இடங்களை ஆக்கிரமிக்கின்றன. இதனால் எமது எல்லைக் கிராமங்களின் இருப்புகள் கைநழுவிப் போகும் அபாயமுள்ளது. அத்துடன் தமிழ்க் கிராமங்கள் அனைத்தும் சிங்களக் கிராமங்களாக மாறுகின்ற அபாயமும் ஏற்பட்டுள்ளது – என்றார்.
Post a Comment