Ads (728x90)

வடக்கு மாகா­ணத்­தின் எல்­லைக்­ கி­ரா­மங்­கள் ஆக்­கி­ர­மிக்­கப்­ப­டு­கின்­றன. இதனை மாகா­ண­சபை வேடிக்கை பார்த்­துக்­கொண்டு இருக்­கின்­றது. எந்­த­வொரு நட­வ­டிக்­கை­யை­யும் எடுக்­க­வில்லை – என மாகா­ண­சபை உறுப்­பி­னர் து.ரவி­க­ரன் குற்­றம்­சாட்­டி­னார்.

மாகா­ண­ச­பை­யின் 107ஆவது அமர்வு நேற்­று ­முன்­தி­னம் அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவஞானம் தலை­மை­யில் இடம்­பெற்­றது இந்­த அமர்­வில் கலந்­து­கொண்டு கருத்­து­களை முன்­வைக்­கும் போதே அவர் இத­னைத் தெரி­வித்­தார்.
அவர் அங்கு தெரி­வித்­த­த­தா­வது:

வடக்கு மாகா­ணத்­தின் எல்­லைக் கிரா­மங்­கள் பல இன்­றும் சூறை­யா­டப்­பட்­டுக் கொண்­டி­ருக்­கின்­றன. முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் தமி­ழர்­க­ளின் அடை­யா­ள­மாகக் காணப்­பட்ட கொக்கி­ளாய் போன்ற எல்­லைக்­கி­ரா­மங்­கள் இன்று பறி­போ­கும் நிலை­யில் உள்­ளன.

இந்­த­ வி­ட­யத்தை பல­முறை மாகா­ண­ ச­பை­யில் சுட்­டிக்­காட்­டிய போதி­லும் இன்­று­வரை அதனை மீட்க எந்த நட­வ­டிக்­கை­யை­யும் சபை எடுக்­க­வில்லை.
இவ்­வா­றான பிரச்­சி­னை­க­ளுக்கு மத்­தி­யில் எமது மாவட்­டத்­தின் பின் தங்­கிய பாட­சா­லை­களை அபி­வி­ருத்­தி­செய்து அங்கு கல்­வி­நி­லையை உயர்த்­து­மாறு நாம் கோரிக்­கை­களை விடுத்து வரு­கின்­றோம்.

ஆனால் அவ்­வா­றான இடங்­க­ளுக்கு நிய­ம­னம் பெற்­று­வ­ரும் ஆசி­ரி­யர்­கள் அர­சி­யல் செல்­வாக்­கு­களை வைத்து உட­ன­டி­யாக இட­மாற்­றம் பெற்­றுச் சென்று விடு­கின்­ற­னர். இத­னால் எமது பிள்­ளை­கள் சிறந்த கல்வி இல்­லாது நடுத் தெரு­வில் நிற்­கின்­ற­னர்.

அண்­மை­யில்­கூட கொக்­கி­ளா­யில் உள்ள பாட­சா­லைக்கு ஆசி­ரி­யர் ஒரு­வர் நிய­மிக்­கப்­பட்­டார். அவர் பாட­சா­லைக்கு வந்த பேருந்­தி­லேயே திரும்­பிச் சென்­று­விட்­டார். இப்­போது அவர் பூந­க­ரிப் பிர­தே­சத்­தில் உள்ள பாட­சா­லை­யில் கற்­பித்து வரு­கின்­றார். இவ்­வா­று­தான் எமது மாகா­ணத்­தின் ஆசி­ரி­யர் நிய­ம­னங்­கள் காணப்­ப­டு­கின்­றன.

இத­னால் பாதிக்­கப்­ப­டு­வது பின் தங்­கிய பிர­தேசத்­தில் வாழும் மாண­வர்­களே.
இந்­த­நிலை காணப்­ப­டு­வ­தால் பின்­தங்­கிய பிர­தே­சத்­தில் வாழும் மக்­கள் வேறு கிரா­மங்­க­ளுக்கு இடம்­பெ­ய­ரும் நிலை காணப்­ப­டு­கின்­றது.

அத்­து­டன் தென்­னி­லங்கைச் சக்­தி­க­ளும் அந்த இடங்­களை ஆக்­கி­ர­மிக்­கின்­றன. இத­னால் எமது எல்­லைக் கிரா­மங்­க­ளின் இருப்­பு­கள் கைந­ழுவிப் போகும் அபாயமுள்ளது. அத்­து­டன் தமிழ்க் கிரா­மங்­கள் அனைத்­தும் சிங்­க­ளக் கிரா­மங்­க­ளாக மாறு­கின்ற அபா­யமும் ஏற்­பட்­டுள்­ளது – என்­றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget