Ads (728x90)

“நாம் இன்றைக்கு சர்வதேச நாடுகளிடம் அரசியல் தீர்வு திட்டங்களில் ஏமாறுகின்ற போது அல்லது ஏமாற்றமடைகின்ற போது சர்வதேச நாடுகளிடமும் ஐ.நா சபையிடம் நியாயம் கேட்பதற்கான வலிமையை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் ?” என பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், இலங்கை தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் நேற்று இடம்பெற்ற சமகால அரசியல் கள நிலை தொடர்பான விழப்புணர்வு கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போது கேள்வி எழுப்பினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

"எங்களிடம் பலம் இல்லை, சர்வதேசத்திடம் தான் நாங்கள் நியாயம் கேட்க வேண்டும் எங்களுடைய இனப்பிரச்சினையை வெல்வதற்கு அரசாங்கத்திற்கு சில விட்டுக்கொடுப்புக்களை செய்ய வேண்டும் அது சரணாகதி அரசியல் இல்லை என்பதனை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு நிறைய விட்டுக்கொடுப்புக்களை அரசாங்கத்திற்கு வெளியிலிருந்து ஆதரித்ததன் காரணத்தினால் தான் இன்றைக்கு எங்களுடைய மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச் சென்று விளக்கேற்றக் கூடிய வசதிகள் கிடைத்துள்ளது.

கடந்த அரசு காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவினர்கள் இன்றைக்கு பல மாதங்களாக தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது ? என்பதனை சொல்லுகின்ற வரையில் தொடர்ச்சியாக நியாயமான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள் என்று சொன்னால் அது இன்றைய அரசுக்கு செய்கின்ற ஆதரவு.

இன்றைக்கு எங்களுடைய மக்களின் காணிகள் பலவற்றை இராணுவம் சூரையாடியுள்ளது அந்த நிலங்களை மீட்டு தர வேண்டும் என்பதற்காக மக்கள் இராணுவத்திற்கு எதிராக போராடுகின்றனர்.

எமது மக்களுக்கு இந்த துணிச்சல் வந்தது இன்றைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் ரீதியாக தம் இனத்திற்கு பெற்றுக்கொடுக்க வேண்டிய பல விடயங்களை தாண்ட வேண்டும் என்பதற்காக இந்த அரசாங்கத்திற்கு வெளியிலிருந்து கொண்டு செய்கின்ற ஆதரவுகள் தான் எங்களுடைய போராட்டங்களை மேலே  கொண்டு வர வைத்துள்ளது என்பதனை யாரும் மறந்து விட முடியாது” என தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget