
முதல் பாகம் தயாரான போதே படத்தின் இரண்டாம் பாகத்தையும் ஏறக்குறைய முடித்து வைத்திருந்தார் கமல்ஹாசன். தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பிரச்சனையால் கடந்த நான்கு வருடங்களாக படம் வெளிவராமல் இழுத்துக் கொண்டே போனது. சமீபத்தில் இரண்டாம் பாகத்திற்காக எடுக்க வேண்டிய சில காட்சிகளையும் எடுத்து முடித்தார் கமல்ஹாசன்.
நாளை கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் டிரைலர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் டிரைலர் மிகவும் பிரமாதமாக வந்துள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். பட வேலைகள் முடிவடையும் நிலையில் இருந்தாலும் படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து உறுதியானத் தகவல்கள் இல்லை. கமல்ஹாசன் தற்போது எடுத்து வரும் 'சபாஷ் நாயுடு' படமும் ஒரு வருடத்திற்கு மேலாக படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருக்கிறது.
விரைவில் அரசியலில் குதிக்க முடிவெடுத்துள்ள கமல்ஹாசன் அடுத்து ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' படத்திலும் நடிக்க உள்ளார்.
Post a Comment