Ads (728x90)

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இன்று இந்­தியா பய­ணிக்­கின்றார். இந்­திய பிர­தமர்   நரேந்­திர மோடி மற்றும் இந்­திய ஜனா­தி­பதி ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் ஆகி­யோரை சந்­தித்து இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்­தையில் ஈடு­ப­ட­வுள்ளார்.

மூன்று நாட்கள் உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்டு இன்று இந்­தியா பய­ணிக்கும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க புதுடில்­லி யில் இந்­திய பிர­தமர் நரேந்­திரமோடி மற்றும் இந்­திய ஜனா­தி­பதி ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் ஆகி­யோ­ருடன் பேச்­சு­வார்த்­தை ­முன்­னெ­டு க்­க­வுள்ளார்.

இதே­வேளை நாளை மறு­தினம்  23 ஆம் திகதி இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி தலை­மையில் புதுடில்­லியின் எரோ­சி­டியில் நடை­பெ­ற­வி­ருக்கும் 5ஆவது உலக சைபர் மாநாட்டின் ஆரம்ப நிகழ்­விலும் பிர­தமர் கலந்­து­கொள்­ள­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

குறித்த விஜ­யத்தில் பேரா­சி­ரியர் மைத்திரி விக்­கிர­ம­சிங்க, சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபி­வி­ருத்தி அமைச்சர் சாகல ரத்­நா­யக்க, பிர­த­மரின் செய­லாளர் சமன் ஏக்­க­நா­யக்க, மேல­திக செய­லாளர் சமன் அதாவுதஹெட்டி மற்றும் விசேட உதவியாளர் சண்ட்ரா பெரேரா ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget