Ads (728x90)

திரு­கோ­ண­ம­லைத் துறை மு­கத்தை இந்­தி­யா­வுக்கோ வேறெந்த நாட்­டுக்கோ தாரை­வார்க்க முற்­ப­ட­ வில்லை என்று தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார்.

ஐக்­கிய தேசி­யக் கட்­சித் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தா­வில் நேற்­று ­முன்­தி­னம் நடந்த செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பில் எழுப்­பப்­பட்ட கேள்­விக்­குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
இந்­தியா வங்­களா விரி­கு­டா­வுக்­குள் அமைந்­துள்ள ஒரு நாடு. அந்த நாடு வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளுக்­காகத் திரு­கோ­ண­ம­லைத் துறை­மு­கத் தைப் பயன்­ப­டுத்­திக் கொள்ள விரும்பி அனு­மதி கோரி­யுள்­ளது.

இலங்­கைக்­குச் சாத­க­மான நன்­மை­க­ளைப் பெற முடி­யும் என்­ப­தால் அதற்­கான அனு­ம­தியை வழங்­கத் தீர்­மா­னிக்­கப்பட்டது. இதே­போன்று ஜப்­பா­னும் தனது விருப்­பத் ­தைக் கோரி­யுள்­ளது. இது குறித்துக் கவ­னம் செலுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

சிங்­கப்­பூர் மற்­றும் எந்­த­வொரு நாடாக இருப்­பி­னும் வங்­களா விரி­கு­டாவை வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள திரு­கோ­ண­ம­லைத் துறை­ மு­கத்தைக் கேந்­தி­ர­மா­கப் பயன்­ப­டுத்த விண்­ணப்­பித்தால் அது குறித்துக் சாத­க­மாக ஆராய முடி­யும்.

அப்­படி நாம் செயற்­ப­டு­வதை எமது துறை­மு­கத்தை மற்­றொரு நாட்­டுக்­குத் தாரை வார்ப்­ப­தாகக் கருத முடி­யாது. எமது நாட்­டின் எந்­த­வொரு வளத்­தை­யும் நாம் எவ­ருக்­கும் தாரை­வார்க்­கப் போவ­தில்லை. சிலர் மக்­களைத் தவ­றாக வழி­ந­டத்த முற்­ப­டு­கின்­ற­னர். கடந்த ஆட்சியின் போது எமது வளங்கள் விற்கப்பட்டது போன்று அரசு செய்ய முற்படமாட்டாது என் பதை உறுதியாகத் தெரி வித்துக் கொள்கின்றேன்  என்றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget