Ads (728x90)

இலங்­கையின் அனைத்துப்பகுதிகளிலும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும். யாழ்ப்­பாணம் மற்றும் முல்­லைத்­தீவு போன்ற மாவட்­டங்­களில் 100–-150 மில்­லி­மீற்றர் மழை­வீழ்ச்சி பதி­வாகும் எனவும் வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் எதிர்வு கூறி­யுள்­ளது.
யாழ்ப்­பாண பிர­தே­சத்தில் 95 வீத­மான மழை­வீழ்ச்­சியும் முல்­லைத்­தீவில் 90 வீத­மான மழை­வீழ்ச்­சியும் பதி­வா­கும்­என வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் குறிப்­பிட்­டுள்­ளது. மேலும் அம்­பாறை, அனுராதபுரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாந்­தோட்டை, கிளி­நொச்சி, கேகாலை, மன்னார், மாத்தறை, மொன­ரா­கலை, திரு­கோ­ண­மலை மற்றும் வவு­னியா ஆகிய மாவட்­டங்­களில் இன்­றைய தினம் மழை அல்­லது இடி­யுடன் கூடிய மழை பெய்யலாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. மழை­யுடன் கூடிய கால­நிலை தொட­ரு­மாயின் 50-–100 மில்­லி­மீற்றர் மழை­வீழ்ச்சி பதி­வாகும்.

ஏனைய மாவட்­டங்­களில் 25-–50 மில்­லி­மீற்றர் மழை­பெய்­யக்­கூடும். எனினும் 75-–90 வீத­மான மழை வீழ்ச்­சி­யுடன் மழை அல்­லது இடி­யுடன் கூடிய கால­நிலை நிலவும் என வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் எதிர்வு கூறி­யுள்­ளது.  


எனவே இடி­யுடன் கூடிய மழை காணப்­படும் பகு­தி­களில் காற்றின் வேகமும் அதி­க­ரித்­தி­ருக்கும். பொது­மக்கள் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்­ச­ரிக்­கை­யுடன் இருக்க வேண்டும். அத்­துடன் வடக்கு மற்றும் கிழக்கு கரை­யோர பகு­தி­களில் மழை­யுடன் கூடிய கால­நி­லை­யுடன் காற்றின் வேகம் அதிகமாக காணப்படும். இப்பகுதி மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

Recent News

Recent Posts Widget