Ads (728x90)

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம்  இடைக்காலத் தடை விதித்து இன்று உத்தரவு பிறத்துள்ளது. இந்த இடைக்காலத் தடையுத்தரவு எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.

உள்ளுராட்சி மன்ற எல்லை மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் செயற்பாட்டை தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

கொழும்பு, கண்டி, மாத்தறை, எம்பிலிப்பிட்டிய, ஹாலிஎல ஆகிய உள்ளூராட்சி மன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 6 பேர் குறித்த வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிபதிகள் குழு முன்னிலையில் இன்று ஆராயப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget