அதாவது கடந்த தினத்தில் பிக்பாஸ் வெற்றி கொண்டாட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ரக்சனும் கலந்து கொண்டார். அதே போல ஜூலியும் கலந்து கொண்டார்.அப்போது அதில் கலந்து கொண்ட அனைவரும் ஒருவருக்கொருவர் கைப்பேசி இலக்கங்களைப் பரிமாறி கொண்டனர்.
அதே போல ஜூலியும், ரக்சனும் பரிமாறி கொண்டனர். அதன்பிறகு இருவரும் கைப்பேசியில் கடலை போட்டுள்ளனர். அதோடு பீனிக்ஸ் மால் போன்ற இடங்களுக்கு ஒன்றாக சுற்றியதை சிலர் பார்த்துள்ளனர்.
ஜூலிக்காக ரக்சன் சில தொலைக்காட்சிகளை தொடர்பு கொண்டு வாய்ப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது.மேலும் தனியார் தொலைக்காட்சியொன்றில் வாய்ப்பு கிடைத்ததும் முதலில் அந்த விஷயத்தை ரக்சனிடம் தான் ஜூலி கூறினாராம்.
அதுமட்டும் அல்லாமல் ஜூலிக்கு ரக்சன் சிறிய மோதிரம் ஒன்றையும் பரிசாக அளித்துள்ளாராம்.அந்த மோதிரம் தற்போது அவரது கையில் உள்ளதாகவும் தெரிகிறது. இது குறித்து இருதரப்பு நெருக்கமானவர்கள் கூறும்போது நெருப்பு இல்லாமல் புகையாது என்றும் கூறுகின்றனர்.
Post a Comment