Ads (728x90)

வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் தொடர்­பில் கைதா­கிப் பிணை­யில் விடு­விக்­கப்­பட்ட சந்­தே­க­ந­பர்­களே, கடந்த சில நாள்­க­ளாக நடை­பெ­றும் வாள்­வெட்­டுக்­க­ளு­டன் தொடர்­பு­பட்­டுள்­ளார்­கள் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். அவர்­க­ளைக் கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன என்று பொலிஸ் உயர் அதி­காரி ஒரு­வர்  தெரி­வித்­தார்.

யாழ்ப்­பா­ணத்­தில் கடந்த சில தினங்­க­ளாக வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் திடீ­ரென அதி­க­ரித்­துள்­ளன. 4 நாள்­க­ளில் 7 சம்­ப­வங்­க­ளில் 9 பேர் காய­ம­டைந்­த­னர்.
‘‘பொலி­ஸார் சுற்­றுக் காவல் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.எனி­னும் சுற்­றுக் காவல் அணி­கள் ஒரு இடத்­தைக் கடக்­கும் வரை காத்­தி­ருந்து அந்­தப் பகு­திக்­குச் சென்று வாள்­வெட்டு நடத்­து­கி­றார்­கள். பொலி­ஸா­ருக்கு சவால் விடும் வகை­யில் இந்த வாள்­வெட்­டுக் கும்­பல்­கள் செயற்­ப­டு­கின்­ற­னவா என்ற கோணத்­தி­லும் நாம் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளோம்’’ என்­றார் அந்த அதி­காரி.

கடந்த காலங்­க­ளில் வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­க­ளு­டன் தொடர்­பு­டைய குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்­றி­னால் பிணை­யில் விடு­விக்­கப்­பட்ட சிலர், தற்­போ­தைய வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­க­ளு­டன் தொடர்­பு­பட்­டுள்­ள­மை­யைத் தாம் அவ­தா­னித்­துள்­ள­னர் என்­றும் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.
‘‘அவர்­களை அடை­யா­ளம் கண்­டுள்­ளோம். விரை­வில் கைது செய்­வோம்’’- என்­றார் அந்த அதி­காரி.

Post a Comment

Recent News

Recent Posts Widget