Ads (728x90)

பல தரப்­புக்­க­ளும் எதிர்­பார்த்­துள்ள உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் அனே­க­மாக ஜன­வரி 29ஆம் திகதி திங்­கட்­கி­ழமை நடை­பெ­றும் என்று  நம்பத்தகுந்த வட்டாரங்கள் அறிவித்துள்ளன.
27ஆம் திகதி தேர்­தலை நடத்­து­வது என்று கட்­சித் தலை­வர்­கள் கூட்­டத்­தில் முடிவு எடுக்­கப்­பட்­டி­ருந்­தா­லும் அந்­தத் திக­தி­யில் தேர்­தலை நடத்­து­வ­தில் தேர்­தல் ஆணைக்­கு­ழு­விற்கு உடன்­பா­டில்லை என்று தெரி­ய­வ­ரு­கி­றது.
உள்­ளூ­ராட்­சி­மன்­றத் தேர்­தல் நடத்­து­வ­தற்­கு­ரிய தடை­கள் எல்­லாம் கடந்த வாரம் நீக்­கப்­பட்டு விட்­டன. இதன் பின்­னர் தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வும் கூடிக் கலந்­து­ரை­யா­டல் நடத்­தி­யது.
ஜன­வரி மாதம் 20ஆம் திக­திக்­கும் 31ஆம் திக­திக்­கும் இடை­யில் ஓர் நாளில் தேர்­தல் நடத்­தப்­ப­டக்­கூ­டும் என்று அந்த ஆணைக்­குழு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­தது.
எனி­னும் பெரும்­பா­லும் ஜன­வரி 29ஆம் திகதி தேர்­தல் நடக்­கும் என்று நம்­பத்­த­குந்த வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.
தேர்­தல் நடத்­து­வ­தற்­கான திக­தியை அர­சி­யல் தலை­வர்­கள் தீர்­மா­னிப்­பது தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் சுயா­தீ­னத்­தில் தலை­யி­டு­வ­தாக அமை­யும் என்று ஆணைக்­குழு உறுப்­பி­னர்­கள் கரு­து­கின்­ற­னர் .

Post a Comment

Recent News

Recent Posts Widget