Ads (728x90)

வடக்கு மாகாண சபை­யில் 2017ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் வரை­யில் சிட்டை சமர்ப்­பிக்­கப்­பட்ட, 1400 மில்­லி­யன் ரூபா­வில் 500 மில்­லி­யன் ரூபா கொழும்­பு திறை­சே­ரி­யால் மாகா­ணத் திறை­சே­ரிக்கு விடு­விக்­கப்­பட்­டது.

வடக்கு மாகாண சபை­யில் 2017ஆம் ஆண்­டுக்­கான உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான ஒதுக்­கீ­டாக 3 ஆயி­ரத்து 411 மில்­லி­யன் ரூபா ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இதில் கடந்த நவம்­பர் மாதம் ஆயி­ரத்து 400 மில்­லி­யன் ரூபா­வுக்­கான சிட்­டை­கள் சமர்ப்­பிக்­கப்­பட்ட நிலை­யில் அதற்­கான கொடுப்­ப­னவை கொழும்­பு திறை­சேரி வழங்­கி­யி­ருக்­க­வில்லை.

குறித்த விட­யம் தொடர்­பில் வரவு செல­வுத் திட்ட விவா­தத்­தின்­போது நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் இ.சாள்ஸ் நிர்­ம­ல­நா­தன் நாடா­ளு­மன்­றில் சுட்­டிக்­காட்­டி­ய ­வேளை இரு நாள்­க­ளில் அதிக தொகை விடு­விக்­கப்­ப­டும் என பதி­ல­ளிக்­கப்­பட்­டது. இதன் பிர­கா­ரம் நேற்­று­முன்­தி­னம் குறித்த நிதி விடு­விக்­கப்­பட்­டுள்­ளது.

குறித்த விட­யம் தொடர்­பில் மாகாண திறை­சேரி வட்­டா­ரங்­க­ளு­டன் தொடர்பு கொண்டு கேட்­ட­போது நிதி கிடைத்­ததை உறுதி செய்­த­னர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget