Ads (728x90)

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் இரண்டு அணி­கள் கூட்­டுச் சேர்­வ­தற்­காக முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச அணி­யி­ன­ரால் முன்­வைக்­கப்­பட்ட நிபந்­த­னை­கள் அடங்­கிய வரை­வுத் திட்­டத்தை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன திட்­ட­வட்­ட­மாக நிரா­க­ரித்­து­விட்­டார் என்று அறி­ய­மு­டி­கின்­றது.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­வ­ரும் அரச தலை­வ­ரு­மான மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அணி­யி­ன­ருக்­கும் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தலை­மை­யி­லான அணி­யி­ன­ருக்­கும் இடை­யி­லான தொடர் பேச்­சுக்­கள் தோல்­வி­ய­டைந்த நிலை­யில், முன்­னணி பௌத்த பிக்­கு­க­ளின் தலை­யீட்­டால் மற்­று­மொரு இணக்க முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டது.

அந்­தப் பிக்­கு­கள் முன்­னாள் அரச தலை­வர் மகிந்­த­வு­டன் பேச்சு நடத்­திப் பெறப்­பட்ட யோச­னை­க­ளின் அடிப்­ப­டை­யில் சில நிபந்­த­னை­க­ளு­டன் கூடிய வரை­வுத்­திட்­டம் ஒன்றை அரச தலை­வ­ரி­டம் முன்­வை­த்தார்­கள்.

ஆனா­லும், அந்­தத் திட்­டத்­தில் உள்ள நிபந்­த­னை­கள் ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தவை என்று அரச தலை­வர் மைத்­திரி திட்­ட­வட்­ட­மாக நிரா­க­ரித்­து­விட்­டார் என்று அறி­ய­மு­டி­கின்­றது.

Post a Comment

Recent News

Recent Posts Widget