Ads (728x90)

இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த  தன்­னிச்­சை­யாக தடுத்­து­ வைத்தல் தொடர்­பாக ஆராயும் ஐக்­கி­ய­நா­டுகள் செயற்­கு­ழுவின்    இலங்கை தொடர்­பான அறிக்கை எதிர்­வரும் 2018ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் நடை­பெ­ற­வுள்ள   ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 39 ஆவது கூட்டத் தொடரில்   சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

இதன்­போது  இலங்­கையில் தடுத்து வைக்கும் விவ­காரம் ,  பயங்­க­ர­வாத தடைச்­சட்டம், பொறுப்­புக்­கூறல் பொறி­முறை  உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்பில்  பரிந்­து­ரை­களை  இந்த அறிக்­கையில்   ஐக்­கி­ய­நா­டுகள் செயற்­குழு முன்­வைக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

குறிப்­பாக   இலங்கை விஜ­யத்தை முடித்­துக்­கொண்டு நாடு திரும்பும் முன்னர்  கொழும்பில் ஊடகவியலாளர்ளை சந்தித்து தன்னிச்சையாக தடுத்­து­வைத்தல் தொடர் ­பாக ஆராயும் ஐக்­கி­ய­ நா­டுகள் செயற்­கு­ழு வின்  உறுப்­பி­னர்கள்  இலங்­கை­யா­னது  பயங்க­ர­வாத தடைச்­ சட்­டத்தை உட­ன­டி­யாக நீக்­க­வேண்டும் என்றும்   மனித சுதந்­தி­ரத்­திற்கு மதிப்­ப­ளிக்­க­வேண்டும் என்றும் குறிப்­பிட்­டி­ருந்­தது.அத்­துடன் பொலிஸ் நிலை­யங்­களில் சட்­டத்­த­ரணி  பிர­சன்­ன­மின்றி   தடுத்­து­வைக்­கப்­பட்­டோரை  அதி­கா­ரிகள்   விசா­ரணை செய்யும் விடயம்  தொடர்பில்   கவ­லை­ய­டைவ­தாக   ஐ.நா. செய­லகம் அறி­வித்­தி­ருந்தது.

மேலும் சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு எதி­ரான சாச­னத்தின் கட்டுப்பாடுகளை  இலங்கை அர­சாங்கம் நிறை­வேற்­ற­ வேண்­டு­மென்றும்   தன் னிச்சையாக தடுத்து வைத்­த­லுக்கு  எதிரான ஐ.நா. செயற்­குழு  அறிவித்துள்ளது.  இதே வேளை ஐக்கியநாடுகள் மனித  உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர்   எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு  மார்ச் மாதம்  நடைபெறவுள்ளமை   குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget