
இதன்போது இலங்கையில் தடுத்து வைக்கும் விவகாரம் , பயங்கரவாத தடைச்சட்டம், பொறுப்புக்கூறல் பொறிமுறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பரிந்துரைகளை இந்த அறிக்கையில் ஐக்கியநாடுகள் செயற்குழு முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் முன்னர் கொழும்பில் ஊடகவியலாளர்ளை சந்தித்து தன்னிச்சையாக தடுத்துவைத்தல் தொடர் பாக ஆராயும் ஐக்கிய நாடுகள் செயற்குழு வின் உறுப்பினர்கள் இலங்கையானது பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக நீக்கவேண்டும் என்றும் மனித சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.அத்துடன் பொலிஸ் நிலையங்களில் சட்டத்தரணி பிரசன்னமின்றி தடுத்துவைக்கப்பட்டோரை அதிகாரிகள் விசாரணை செய்யும் விடயம் தொடர்பில் கவலையடைவதாக ஐ.நா. செயலகம் அறிவித்திருந்தது.
மேலும் சித்திரவதைகளுக்கு எதிரான சாசனத்தின் கட்டுப்பாடுகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென்றும் தன் னிச்சையாக தடுத்து வைத்தலுக்கு எதிரான ஐ.நா. செயற்குழு அறிவித்துள்ளது. இதே வேளை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment