Ads (728x90)

16 பேர் கொண்ட குழு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதில்லையென அறிவித்துள்ளது.

நேற்று (29) ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அக்குழுவின் உறுப்பினர் ரி.பீ. ஏக்கநாயக்க இதனைக் கூறினார்.

தமக்கு இரண்டு தீர்மானங்களில் கால் வைத்திருக்க முடியாது. கூட்டு எதிரணியில் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளோம். பொதுஜன பெரமுனவில் இணையுமாறு மஹிந்த ராஜபக்ஷ கூறுவாராயின் நாம் இணைந்து கொள்ளத் தயார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள முக்கிய உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்திலிருந்து விலகுமாறும் 16 பேர் கொண்ட குழுவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

Recent News

Recent Posts Widget