
உப்பை பயன்படுத்தி இந்த நிலையை மாற்ற சில வழிகள் இருக்கின்றன. இதனால் வீட்டில் இருக்கும் ஏழ்மை விலக, கெட்ட சக்திகளை நீக்க முடியும் என கூறப்படுகிறது.
இந்த வழியை ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் செய்ய வேண்டாம். இந்த வழியை செய்ய நீங்கள் கடல் உப்பை நீருடன் கலக்கி அதை வீட்டை முழுக்க கழுவ வேண்டும். இது வீட்டில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தையும் நீக்கி விடுமாம்.
ஒரு கப் நீரில் ஒரு சிட்டிகையளவு உப்பு சேர்த்து அதை வீட்டின் தென்மேற்கு மூலையில் வைக்கவும். இது வீட்டிலிருந்து ஏழ்மை விலக செய்யுமாம். இந்த வழியை செய்யும் போது எப்போதெல்லாம் நீரின் வண்ணம் மாறுகிறதோ, அப்போதெல்லாம் நீங்கள் நீரை மாற்றி உப்பு சேர்த்து வைக்க வேண்டுமாம்.
உள்ளங்கையளவு உப்பு எடுத்து அதை ஒரு சட்டியில் போட்டு அதை குளியலறையின் ஒரு மூலையில் வைத்துவிடவும். இந்த உப்பை சீரான இடைவேளையில் நீங்கள் மாற்ற தவறக் கூடாது. இது வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தியை குறைத்து ஏழ்மை நீங்க உதவுமாம்.
சிவப்பு துணியில் உப்பு சேர்த்து கட்டி அதை வீட்டின் நுழைவாயில் பகுதியில் கட்டி தொங்கவிடவும். இது வீட்டுக்குள் இருக்கும் கெட்ட சக்தி நீங்கவும், நல்ல அதிர்வுகள் ஏற்படவும் உதவும்.
சாப்பாட்டு மேசையில் சாப்பிடும் இடத்தில் உப்பு வைப்பது செல்வச் செழிப்பு அதிகரிக்க உதவும். வீட்டில் செல்வம் குறையவே குறையாதாம்.
Post a Comment