
டெல்லியில் நடைபெற்று வரும் உலக மகளிர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் தொடரில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வந்தன.
இதில் 48 கிலோ கிராம் எடைப் பிரிவில் இலங்கை வீராங்கனை அனுஷா கொடிதுவக்குவும் கலந்துகொண்டிருந்தார். ஆனால் அவர் முதல் சுற்றிலேயே சுவீடன் வீராங்கனையிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
இந்நிலையில் 48 கிலோ எடைப்பிரிவுக்காக நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவின் மேரிகோம், உக்ரைனின் ஹன்னா ஒகோட்டோவை எதிர்கொண்டார்.
இப் போட்டியில் அபாரமாக ஆடிய மேரி கோம் 5-–0 என்ற கணக்கில் உக்ரைன் வீராங்கனை ஹன்னா ஒகோட்டோவை வீழ்த்தினார். இதன்மூலம் அவர் உலக குத்துச்சண்டை போட்டியில் 6ஆவது தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
Post a Comment