Ads (728x90)

புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாட முயன்றார் எனும் குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட எம்.கே.சிவாஜிலிங்கம், விடுவிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாட முயன்றாரெனக் குற்றஞ்சாட்டி, வல்வெட்டித்துறை பொலிஸாரால், இன்று காலை கைது செய்யப்பட்டார்.

அதன்போது, அவர் வசமிருந்த பிறந்தநாள் கேக் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் பறிமுதல் செய்த பொலிஸார் , அவரைக் கைதுசெய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருந்தனர்.

இந்நிலையில், பொலிஸ் நிலையத்தில் வைத்து, மேலதிக நடவடிக்கை குறித்த அறிவுறுத்தல்களை பின்னர் வழங்குவதாகக் கூறி, சிவாஜிலிங்கத்தை பொலிஸார் விடுவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget