
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாட முயன்றாரெனக் குற்றஞ்சாட்டி, வல்வெட்டித்துறை பொலிஸாரால், இன்று காலை கைது செய்யப்பட்டார்.
அதன்போது, அவர் வசமிருந்த பிறந்தநாள் கேக் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் பறிமுதல் செய்த பொலிஸார் , அவரைக் கைதுசெய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருந்தனர்.
இந்நிலையில், பொலிஸ் நிலையத்தில் வைத்து, மேலதிக நடவடிக்கை குறித்த அறிவுறுத்தல்களை பின்னர் வழங்குவதாகக் கூறி, சிவாஜிலிங்கத்தை பொலிஸார் விடுவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
Post a Comment