பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்பது நிரூபிக்கப்பட்ட பின்னர் ஆட்சியிலிருந்து விலகிக் கொள்வதே ஜனநாயகமாகும். பாராளுமன்ற குழு அறையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தெரிவுக்குழுவுக்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான குழுவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காண்பிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி பதவியேற்ற அரசாங்கத்துக்கு சட்டரீதியான உரிமை எதுவும் இல்லை என்பதுடன் அவர்கள் இந்த நாட்டை ஆட்சி செய்வது ஜனநாயகத்துக்கு விரோதமானதாகும்.
தெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமனம் குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் யாருக்குப் பெரும்பான்மை உள்ளது என்பது புலனாகியுள்ளதோடு, எமது தரப்பில் 121 பெரும்பான்மையைக் கொண்ட உறுப்பினர்கள் இருக்கின்றனர் என்பதை உலகிற்கு காண்பிக்க முடிந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment