
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டாவது பதவிக்காலத்துக்காக போட்டியில் நிறுத்தப்படும் வாய்ப்புகள் இல்லை என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக நிறுத்தும் இணக்கப்பாட்டுடனேயே கடந்த ஒக்ரோபர் 26ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
எனினும் இரண்டாவது பதவிக்காலத்துக்காக மைத்திரிபால சிறிசேன போட்டியிடமாட்டார் என்று அவருக்கு நெருக்கமான தரப்புகளை மேற்கோள்காட்டி, சிங்கள இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஒரு மாத காலத்தில் மைத்திரிபால சிறிசேனவின் செல்வாக்கு படுமோசமாக வீ்ழ்ச்சியடைந்துள்ளது. அவர் மீது பொதுமக்கள் ஆழ்ந்த அதிருப்தி கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் அவரை அதிபர் வேட்பாளராக நிறுத்துவது பொருத்தமில்லை என்று பொதுஜன முன்னணியின் அமைப்பாளரான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Post a Comment