Ads (728x90)

தமக்குப் பெரும்பான்மை உள்ளதாகவும், தாம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளதாகவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் நாளை (14) கூடுகின்றது. பாராளுமன்றத்தை நாளை கூட்டியிருப்பது சபாநாயகர் அல்லவெனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே எனவும் அவர் கூறியுள்ளார்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தாம் மதிக்கின்றோம். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஏற்ப, இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் ஆதாரங்களை முன்வைக்க காலம் வழங்கப்பட்டள்ளது. தாம் அதனை சிறந்த முறையில் முகம்கொடுப்போம்.
இந்த நேரத்தில் சபாநாயகருக்கு தாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அவர் பாராளுமன்றத்தின் அதிகாரத்தையும், கௌரவத்தையும் பாதுகாத்தார். சகல மதத் தலைவர்களுக்கும், சிவில் அமைப்புக்களுக்கும் நன்றிகள் எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார். 

Post a Comment

Recent News

Recent Posts Widget