
இதனையடுத்து சிரிய ராணுவம் பயங்கரவாதிகளுக்கு உரிய பதிலடி கொடுத்தது. இதில் பயங்கரவாதிகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைக்கும், கிளர்ச்சியாளர் படைக்கும் இடையே கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் பெண்கள், குழந்தைகள் என லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். அரசுக்கு எதிராக ஐ.எஸ்., பயங்கரவாதிகளும் போரில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து சிரியாவிற்கு ஆதரவாக ரஷ்யாவும் போரில் ஈடுபட்டுள்ளது. இரசாயன தாக்குதல் நடந்த அலெப்பே நகரம் சிரியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நகரை பிடிக்க பயங்கரவாதிகள் பல்வேறு தாக்குதல் நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகள் ரசாயனம் மூலம் தாக்குதல் நடத்தலாம் என ஏற்கனவே ரஷ்யா எச்சரிக்கை விடுத்திருந்தது.
Post a Comment