
அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இதனை தெரிவித்துள்ளார்.அதன் பின்னர் அந்த அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோதலில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பில், சபாநாயகர் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் சட்டமா அதிபரினால், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்டநடவடிக்கைகள் தொடர்பில் சபாநாயகர் அறிவிப்பார். அதன்பின்னர் நாடாளுமன்றத்தின் எதிர்கால செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும் என பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 15, 16 மற்றும் 17ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக மோதல் சம்பவங்கள் பதிவாகின.
இதனையடுத்து அதுகுறித்து ஆராய சபாநாயகரினால், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்த குழுவில் ஆளுந்தரப்பினர் மற்றும் எதிர் தரப்பினர் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர். குறித்த குழு 10 தடவகைளுக்கு மேல் கூடி சம்பவம் குறித்து ஆராய்ந்துள்ளது. இது குறித்த அறிக்கை தற்போது தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அதற்கு மேலதிகமாக சம்பவம் தொடர்பில் காவற்துறையினரும் விசாரணைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment