குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை கட்டாயமாக அமல்படுத்தியதன் மூலம் 70 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சீனாவில் மக்கள் தொகை குறைந்துள்ளது.உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் முதன்மையான நாடாக சீனா விளங்குகிறது. அதிக மக்கள் தொகையால் பல்வேறு இன்னல்களை சந்தித்த அந்நாடு ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்பது உள்பட பல கடுமையான விதிமுறைகளை கடந்த 10 ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறது.
இதன் காரணமாக கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு முதன்முறையாக அங்கு மக்கள் தொகை குறைந்துள்ளது. இந்த திட்டம் அமலுக்கு வருவதற்கு முன்னர் ஆண்டுக்கு 25 லட்சமாக இருந்த குழந்தை பிறப்பு இப்போது ஆண்டுக்கு 7 லட்சத்து 90 ஆயிரமாக குறைந்துள்ளது.
இதனால் சீனாவின் பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல், சமூக அமைப்பில் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
Post a Comment