Ads (728x90)

கிளிநொச்சி - பளை பிரதேசத்தில் ஆயுதங்கள் தொகையுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் , 150 தோட்டாக்கள் மற்றும் மேலும் ஆயுதங்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளன.

பயங்கரவாத விசாரணைப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. 40 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப்பிரிவு மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget