
இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை (15 ஆம் தேதி) நடைபெறுகிறது. இப்போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் இந்திய அணி உள்ளது. அதேசமயத்தில், 2-வது ஒருநாள் போட்டியையும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி உள்ளது.
இந்திய அணி வாழ்வா? சாவா? கட்டத்தில் உள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் இன்று தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். முன்னதாக, வலைப்பயிற்சியில் ஈடுபட வரும் இந்திய வீரர்களைக் காண ரசிகர்கள் அங்கு ஏராளமானோர் திரண்டனர். ரசிகர்கள், கேப்டன் கோலி உள்ளிட்ட வீரர்களிடம் ஆர்வமுடன் செல்பி மற்றும் ஆட்டோகிராப் பெற்றுக்கொண்டனர்.
Post a Comment