Ads (728x90)

யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்கரை பகுதியில் இருந்து 114 கிலோ கேரளா கஞ்சா இன்று (07.01)அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை மற்றும் காங்கேசந்துறை கடற்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து பருத்திதுறை பொலிஸாருடன் இணைந்து குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கஞ்சா தற்போது பருத்தித்துறை பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

மேலும் பருத்தித்துறைப் பொலிஸார் மீட்கப்பட்ட கஞ்சாவைப் நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget