Ads (728x90)


இலங்கை மத்திய வங்கி என அடையாளப்படுத்தி மோசடியான மின்னஞ்சல் தகவல்களை பரிமாற்றும் முயற்சிகள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நோட்ஸ் ப்ரோம் சென்ரல் பேன்க் ஒப் ஸ்ரீலங்கா ஈ.பி.எப் என்ற தொனிப்பொருளில் நாட்டின் நிதி நிறுவனங்களை இலக்கு வைத்து போலியான பரிமாற்றங்கள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறானதொரு எந்தவொரு அறிவிப்பையும் இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதி திணைக்களம் வெளியிடவில்லை என பொது மக்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அறிவிப்பதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

குறித்த மோசடி மின்னஞ்சல்கள் மற்றும் அது தொடர்பான இணைப்புக்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget