Ads (728x90)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி ஏற்று இன்றுடன் 4 வருடங்கள் நிறைவடைகின்றன. 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறக்கப்பட்ட அவர், இந்த நாட்டின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவானார்.

அந்த தேர்தலில் அவருக்கு 62 லட்சத்து 17 ஆயிரத்து நூற்று அறுபத்து இரண்டு வாக்குகள் வழங்கப்பட்டன. அவரது நான்காண்டு பதவிப் பூர்த்தியை முன்னிட்டு இன்று பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி களுகங்கை நீர்நிலை வேலைத்திட்ட நிறைவு நிகழ்வும், மொரகஹாகந்த வேலைத்திட்டத்தின் கீழ் வருகின்ற பழைய லக்கலை நகருக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள லக்கலை புதிய நகரை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வும் இன்று நடைபெறவுள்ளன.

இதேவேளை, சிறிலங்கா சுதந்திர கட்சியின் நிறுவுனரும் முன்னாள் பிரதமருமான எஸ்.டபிள்யு. ஆர்.டி பண்டாரநாயக்கவின் 120வது பிறந்த தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு கொழும்பு காலி முகத்திடலில் உள்ள பண்டாரநாயக்க சிலைக்கு முன்னால் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையேற்று கலந்துக் கொள்ளவுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget