Ads (728x90)

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்றைய தினம் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம் பெறவுள்ளது.

புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேநேரம், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி என்பன தனிநபரில் தங்கியிருக்காது, ஏதாவது ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்து போட்டியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget