Ads (728x90)

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ போட்டியிடுவதையும், வெற்றிபெறுவதையும் எந்த அரசியல் கட்சிகளோ அல்லது அரசியல் ஜாம்பவான்களினாலோ தடுத்துநிறுத்த முடியாது என அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நேற்று மாத்தளைத் தேர்தல் தொகுதியின் ஈலியகொல்லையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஸ்ரீமத் அலிக் அலுவிஹாரே வீட்டுத்திட்டத்தை பயனாளிகளுக்குக் கையளிக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் பற்றி நாட்டில் இன்று பரவலாக பேசப்படுகின்ற நிலையில் கடந்த 18ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஜே. வி. பி யின் கூட்டத்தில் அதன் தலைவர் அநுர குமாரதிஸாநாயக்க ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 11ம் திகதி பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஸ்ரீ. ல. சு. க. யிலும், ஐ. தே. கவிலும் இன்னும் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. ஜனாதிபதித்தேர்தலில் ஐ. தே. கட்சியில் எனது பெயரை முன்வைத்தாலும், முன் வைக்காவிட்டாலும் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவார் என்பதை ஆணித்தரமாக கூறிவைக்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget