Ads (728x90)

இலங்கை போக்குவரத்து துறையை மேம்படுத்துவதற்காக இரண்டாயிரம் பேருந்துகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீா்மானித்துள்ளது. இதற்காக 1, 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. 

நாட்டில் தற்போது சேவையில் ஈடுபடும் பேரூந்துகள் பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பு தொடர்பாக கவனம் செலுத்தவில்லை எனவும் இதன் காரணமாக பொதுப்போக்குவரத்து நடவடிக்கைகளில் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பு கருதி இறக்குமதி செய்யப்படவுள்ள பேரூந்துகள் இலங்கை போக்குவரத்து சபையிடம் கைளிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget