Ads (728x90)

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொழும்பு – அங்கொடை தேசிய தொற்று நோயில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாகச் செயற்பட்டவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மாரவில பகுதியை சேர்ந்த குறித்த நோயாளி, சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட ஒருவர் எனவும், அவர் உயர் குருதி அழுத்தம் கொண்ட ஒருவர் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.




Post a Comment

Recent News

Recent Posts Widget