Ads (728x90)

வெளிநாடுகளில் இருந்து வருவோரின் தனிமைப்படுத்தல் காலம் 21 நாட்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்ர சில்வா தெரிவித்தார்.

இந்நிலையில் ஏற்கனவே 14 நாள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த அனைவரையும் அவரவர் வீடுகளில் மீள சுய தனிமைப்படுதலுக்கு உள்ளாகுமாறு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று வரை இலங்கையில் தனிமைப்படுத்தல் முகாம்கள் அல்லது நிலையங்களில் மட்டும் 3415 பேர் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து வெளியேறியிருந்தனர்.

இவர்களுக்கு தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்தமைக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே அவ்வாறு தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த அனைவரையும் மேலும் 14 நாட்கள் சுய தனிமைப்படுதலில் ஈடுபட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget